search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கருங்கல் அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு

    கருங்கல் அருகே அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே கப்பியறை வாத்தியார் கோணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று காலையில் ஆசிரியர்கள் சென்ற போது கம்ப்யூட்டர் ஆய்வகத்தின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது மானிட்டர், கீபோர்டு, மவுஸ் போன்ற கம்ப்யூட்டர் சாதனங்கள் திருடப்பட்டிருந்தன. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜான் லத்தீஸ் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×