search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பழைய ஓய்வூதிய திட்டம்-ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    அரசுப்பள்ளிகளை நோக்கி தனியார் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வருவதால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருப்பூர்:

    தேசிய ஆசிரியர்-அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக்கூட்டம், காங்கேயம் சாலையிலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கோட்டச்செயலாளர் ப.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் ப.தண்டபாணி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுப்பள்ளிகளை நோக்கி தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் வருவதால் உரிய கட்டமைப்பு வசதிகளையும், தேவைப்படும் பள்ளி உபகரண பொருட்களையும் முறையாக ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணைத்தலைவர் தா.மு.செந்தில்குமார் நன்றி கூறினார். மாவட்ட பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், மகேந்திரன், பிரபு, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×