search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கலர் கோழி குஞ்சுகள்.
    X
    விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கலர் கோழி குஞ்சுகள்.

    பொதுமக்களை கவரும் கலர் கோழி குஞ்சுகள்

    வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் கீச் கீச் என்று சத்தமிட்டு கொண்டிருக்கும் கோழி குஞ்சுகளை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி வாங்கி செல்கின்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு அருகில் உள்ள நூலகம் முன்பாக கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்த கலர் கோழி குஞ்சுகள் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளது. ஜோடி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வண்ணத்தில் இருப்பதால் காண்பவர் மனதை கவர்ந்து இழுக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் கீச் கீச் என்று சத்தமிட்டு கொண்டிருக்கும் கோழி குஞ்சுகளை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி வாங்கி செல்கின்றனர்.

    நாமக்கல்லில் இருந்து வாங்கப்படும் இந்த பிராய்லர் குஞ்சுகள் மீது பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணங்கள் தீட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதிப்படைந்த விற்பனையாளர்கள் தற்போது ஏற்பட்ட தளர்வுகளால் விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×