search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தருமபுரி மாவட்டத்தில் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 208 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தருமபுரி மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 892 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 71 பேர் நேற்று குணடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது மாவட்டம் முழுவதும் 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 208 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×