search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

    ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி புளியங்கொட்டை பகுதியில் சாராயம் விற்பதாக ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புளியங்கொட்டை பகுதியில் வீட்டின் பின்புறத்தில் மறைவான இடத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் அன்பழகன் (வயது31) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
    Next Story
    ×