என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அருகே உலர் பூ தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து
Byமாலை மலர்30 Jun 2021 1:09 PM GMT (Updated: 30 Jun 2021 1:09 PM GMT)
தூத்துக்குடியில் உலர் பூ தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, தாளமுத்துநகர், சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 66). இவர் நேரு காலனியில் உலர் பூ உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து உள்ளது.
இதில் அந்த தொழிற்சாலையில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டு இருந்த உலர் பூக்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியது. இதில் உலர் பூக்கள் மற்றும் உலர் பூ தயாரிக்க வைத்திருந்த ரசாயனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. ஆலையின் மேற்கூரையும் எரிந்து நாசமானது.
சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.13 லட்சம் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X