என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
கோவை:
கோவை சின்னவேடம்பட்டி அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கல்பனா (வயது 22). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்தபடி பாடம் படித்து வந்தார். கல்பனா அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்தார் .இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மன வேதனை அடைந்த கல்பனா கடந்த 4 நாட்களாக தனது தந்தையிடம் பேசாமல் இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த கல்பனா வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூச்சி மருந்தை கரைத்துக் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் கல்பனா மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கல்பனா மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கல்பனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்