search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்னேஸ்வரன்
    X
    விக்னேஸ்வரன்

    ஆத்தூரில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு தர்மஅடி

    ஆத்தூரில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
    ஆத்தூர்:

    ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 23). தொழிலாளி. இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, தனது வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அழுது கொண்டு அங்கிருந்து ஓடி வந்து, தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளாள்.

    இதை கேட்டு ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் விக்னேஸ்வரனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விக்னேஸ்வரனை பிடித்து விசாரித்தனர். மேலும் சிறுமியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததில் காயம் அடைந்த விக்னேஸ்வரனை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று இரவு ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×