என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருமப்பட்டி அருகே விவசாயி அடித்துக்கொலை
Byமாலை மலர்26 Jun 2021 8:29 AM GMT (Updated: 26 Jun 2021 8:29 AM GMT)
எருமபட்டி அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி (34). இவரது மனைவி கவுரி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். பழனிசாமியின் தந்தை பெருமாளும், தாய் மணியம்மாள் ஆகியோர் அவரது சகோதரர் சுப்பிரமணி வீட்டில் வசித்து வருகிறார்கள். இதனிடையே பழனிச்சாமி தனிமையில் இருப்பதால் சமைப்பதற்காக அவரது தாய் மணியம்மாளை அழைத்துவர அவர் சகோதரர் சுப்ரமணி வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி மற்றும் தந்தை பெருமாள் ஆகிய இருவரும் பழனிச்சாமியை கீழே தள்ளி விட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பழனிச்சாமி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி இறந்தார். இதுகுறித்து வேலம்பட்டி போலீசார் சுப்பிரமணி மற்றும் அவரது தந்தை பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 2 பேரும் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி (34). இவரது மனைவி கவுரி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். பழனிசாமியின் தந்தை பெருமாளும், தாய் மணியம்மாள் ஆகியோர் அவரது சகோதரர் சுப்பிரமணி வீட்டில் வசித்து வருகிறார்கள். இதனிடையே பழனிச்சாமி தனிமையில் இருப்பதால் சமைப்பதற்காக அவரது தாய் மணியம்மாளை அழைத்துவர அவர் சகோதரர் சுப்ரமணி வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி மற்றும் தந்தை பெருமாள் ஆகிய இருவரும் பழனிச்சாமியை கீழே தள்ளி விட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பழனிச்சாமி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி இறந்தார். இதுகுறித்து வேலம்பட்டி போலீசார் சுப்பிரமணி மற்றும் அவரது தந்தை பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 2 பேரும் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X