search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜகோபாலன்
    X
    ராஜகோபாலன்

    பாலியல் குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்பட்ட புகாரில் ராஜகோபாலனை போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்பட்ட புகாரில், போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கே.கே.நகர் அனைத்து மகளிர் போலீசாரால் மே 24 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.


    ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வரிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
    Next Story
    ×