என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவையாறு அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வி.ஏ.ஓ. - போலீசார் விசாரணை
திருவையாறு:
திருவையாறு அருகே நடுக்காவேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 33). இவர் அள்ளூர் வி.ஏ.ஓ வாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி நிவேதா (28) என்கிற மனைவி உள்ளார். குழந்தை இல்லை.
நேற்று காலை தனது தம்பி விவேக்குடன் தென்பெரம்பூர் வெண்ணாற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றின் வட கரையருகே விவேக்கை அமரச் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் விவேக் அதிர்ச்சியடைந்த தேடிய போது, ஆற்றின் வடகரையிலுள்ள ஒரு தேக்கு மரத்தில் ராஜீவ்காந்தி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்து வி.ஏ.ஓ விஜயலெட்சுமி, தாசில்தார் நெடுஞ்செழியன், டி.எஸ்.பி சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ராஜீவ்காந்தியை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ராஜீவ்காந்தியின் மனைவி நிவேதா கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜீவ்காந்தி எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்