என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.
இவருக்கு இசக்கியம்மாள் (வயது 55) என்ற மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 2 மகன்களும் திருமணமாகி குடும்பத்துடன் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகின்றனர்.
செல்வராஜ் தனது மகளை அதே தெருவில் தனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் செல்வராஜ் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
அவர்களது மருமகள்களான பிரேமா, கவிதா ஆகியோரின் நகைகள் செல்வராஜ் வீட்டில் தான் இருந்துள்ளது.
சம்பவத்தன்று கணவன்- மனைவி 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு ஆடு மேய்க்க சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 18 பவுன் தங்க நகையை மர்மநபர் திருடிச்சென்றுவிட்டார். மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே மானூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்