என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் புதிய உச்சம் - ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை
Byமாலை மலர்24 Jun 2021 3:32 AM GMT (Updated: 24 Jun 2021 3:32 AM GMT)
தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆரம்பத்தில் இருந்தே பெட்ரோல்- டீசல் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 முறைக்கும் மேல் பெட்ரோல்- டீசல் விலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது
விழுப்புரம்:
பொதுத்துறையை சேர்ந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல்- டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆரம்பத்தில் இருந்தே பெட்ரோல்- டீசல் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 முறைக்கும் மேல் பெட்ரோல்- டீசல் விலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 8 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டீசல் 94.20 ரூபாய்க்கும் விற்பனையானது. பவர் பெட்ரோல் ரூ.102.67-க்கு விற்றது.
விழுப்புரத்தில் முதன் முறையாக ரூ.100-ஐ கடந்து பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதால் நேற்று வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள், அதன் விலையை பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
பொதுத்துறையை சேர்ந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல்- டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆரம்பத்தில் இருந்தே பெட்ரோல்- டீசல் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 முறைக்கும் மேல் பெட்ரோல்- டீசல் விலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 8 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டீசல் 94.20 ரூபாய்க்கும் விற்பனையானது. பவர் பெட்ரோல் ரூ.102.67-க்கு விற்றது.
விழுப்புரத்தில் முதன் முறையாக ரூ.100-ஐ கடந்து பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதால் நேற்று வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள், அதன் விலையை பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X