search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கந்தம்பாளையத்தில் சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது

    கந்தம்பாளையத்தில் சேவல் சண்டை நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தம்பாளையம்:

    பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள ராசாம்பாளையம் கருப்பனார் கோவில் அருகே சிலர் சேவல் சண்டை நடத்துவதாக நல்லூர் போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்திய 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குன்னமலையை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார் (வயது 37), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் (32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.17 ஆயிரத்து 400-ஐ பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×