search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    கோவையில் மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை

    கோவையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி அம்மாள்(87). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. இதன் காரணமாக லட்சுமி அம்மாள் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்துக் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லட்சுமி அம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×