என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பஸ்கள் பராமரிப்பு பணிகள் தீவிரம்
Byமாலை மலர்21 Jun 2021 7:05 AM GMT (Updated: 21 Jun 2021 7:05 AM GMT)
ஊரடங்கு தளர்வில் திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு காரணமாக பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படவில்லை.
உடுமலை:
உடுமலை கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன் பஸ்கள் 58-ம் என மொத்தம் 94 பஸ்கள் உள்ளன. முழு ஊரடங்கையட்டி கடந்த மே மாதம் 24-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்படாத நிலையில் உடுமலையில் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அனைத்தும் உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு பின்புறம் பை-பாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஊரடங்கையட்டி கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்பதால் பஸ்களை இயக்குவதற்கு தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் பஸ்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்தது. ஆனால் நேற்று அறிவித்த ஊரடங்கு தளர்வில் திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு காரணமாக பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் பஸ்களை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பணிகள் அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளை மேலாளர் மணிகண்டன் மேற்பார்வையில் அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களால் நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X