search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

    கோவையில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை காட்டூர் ஆவாரம்பாளையம் ரோடு தனியார் ஆஸ்பத்திரி அருகே வாலிபர் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் வெள்ளை ராஜ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த சித்தாபுதூர் வெங்கிடுசாமி வீதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.400 கிலோ கஞ்சா, ரூ.4,500 ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×