என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யூடியூபர் மதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கொண்டு வரப்பட்டார்
Byமாலை மலர்18 Jun 2021 2:46 PM GMT (Updated: 18 Jun 2021 2:50 PM GMT)
பல நாட்களாக தலைமறைவாக இருந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.
மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல நாட்களாக தலைமறைவாக இருந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தர்மபுரியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மதனை இன்று இரவு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தற்போது யூடியூபர் மதனை தீவிரமாக போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X