search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பப்ஜி மதன் கைது
    X
    பப்ஜி மதன் கைது

    பப்ஜி மதனை கைது செய்தது போலீஸ்

    பப்ஜி மதன் மீதான புகார்கள் தொடர்பாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    கைது

    இந்த நிலையில், பல நாட்களாக தலைமறைவாக இருந்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர். மதனை இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×