என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க., டிஜிட்டல் பேனர்களை போலீசார் அகற்றியதால் பரபரப்பு
Byமாலை மலர்18 Jun 2021 8:06 AM GMT (Updated: 18 Jun 2021 8:06 AM GMT)
டிஜிட்டல் பேனர்கள் வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என தி.மு.க., தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பெரியதோட்டம், செல்லாண்டியம்மன் துறை உள்ளிட்ட 5 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
அதில் இஸ்லாமிய மக்களுக்காக நாச்சிபாளையத்தில் கபர்ஸ்தான் அமைக்க 95 சென்ட் இடம் வழங்கி உத்தரவிட்ட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வாசகங்கள் இடம்பெற்று இருந்தது.
இந்தநிலையில் இன்று திருப்பூர் பெரியபள்ளிவாசலில் தி.மு.க., எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தலைமையில் கபர்ஸ்தானுக்கு இடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருப்பதை அகற்ற வேண்டும் என தி.மு.க., தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் வந்து அந்த பேனர்களை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X