search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முன்பதிவு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி

    மாற்றுத்திறனாளிகளை வாகனங்களில் அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திய பின்னர் அவர்களது இருப்பிடத்துக்கே கொண்டு சென்றுவிடப்படும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடிவெளியிட்டுள்ள அறிக்கையில், 

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை 0421-2240852, 2237852 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை வாகனங்களில் அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திய பின்னர் அவர்களது இருப்பிடத்துக்கே கொண்டு சென்றுவிடப்படும்.இதற்குத் தேவையான வாகன வசதி மாநகராட்சி மூலமாக செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×