என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்17 Jun 2021 8:44 AM GMT (Updated: 17 Jun 2021 8:44 AM GMT)
அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 268 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக தென்மேற்கு பருவமழை சாரலாக பெய்து வருகிறது. அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 974 கன அடி நீர்வரத்து உள்ளது.
அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு 74.51 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 268 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் அமைந்துள்ள வால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த மழையால் பி.ஏ.பி., பாசன திட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X