என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்நோக்கு உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்17 Jun 2021 8:24 AM GMT (Updated: 17 Jun 2021 8:24 AM GMT)
விண்ணப்பிக்கும் பெண்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அலுவலக உதவியாளராக பணியாற்றியிருக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.-
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அலுவலக உதவியாளராக பணியாற்றியிருக்க வேண்டும். இந்தப்பணிக்கு மாத ஊதியமாக ரூ.6,400 வழங்கப்படும். ஆகவே தகுதியான பெண்கள் வரும் ஜூன் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர்,அறை எண் 35 மற்றும் 36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் -641604 மற்றும் 0421-2971168, 91504-08101 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X