search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்ரா செல்வி.
    X
    சித்ரா செல்வி.

    திருப்பூர் பெண் சாவில் திடீர் திருப்பம்-காதலனை அழைத்து சென்றதால் தற்கொலை செய்தது அம்பலம்

    ரமேஷின் மனைவி மற்றும் உறவினர்கள் திருப்பூர் வந்து சித்ராசெல்வியிடம் தட்டிகேட்டுள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் சித்ரா செல்வி (வயது 31). இவரது கணவர் இறந்து விட்டார். இந்தநிலையில் அவருக்கு திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த சிவகாசியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

    ரமேசுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் ரமேசும், சித்ரா செல்வியும் பழகி வந்ததுடன் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள  வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    இதையறிந்த ரமேஷின் மனைவி மற்றும் உறவினர்கள் திருப்பூர் வந்து சித்ரா செல்வியிடம் தட்டிகேட்டுள்ளனர். மேலும் ரமேசை கையோடு ஊருக்கு அழைத்து சென்றனர். 

    இதனால் மனமுடைந்த சித்ரா செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அப்போது கீழே விழுந்ததில் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காயம் காரணமாக சித்ரா செல்வியை ரமேஷின் மனைவி மற்றும் உறவினர்கள் தாக்கியதால் இறந்திருக்கலாம் என  போலீசார் சந்தேகித்தனர். இதுதொடர்பாக ரமேஷ் மனைவி மற்றும் உறவினர்களிடம் நல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். 

    இந்தநிலையில் பிரேத பரிசோதனையில் சித்ரா செல்வி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×