என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடைகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு அனுப்பி வைப்பு - நாளை முதல் வழங்கப்படுகிறது
Byமாலை மலர்14 Jun 2021 4:01 PM GMT (Updated: 14 Jun 2021 4:01 PM GMT)
ரேஷன் கடைகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது. நாளை முதல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
நாகர்கோவில்:
கொரோனா நிவாரண உதவியாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2-ம் தவணை ரூ.2 ஆயிரம் ஆகியவை ரேஷன் கடைகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 551 ஆயிரத்து 279 ரேஷன் கார்டுகள் பயன்பெற உள்ளன. மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன்கள் கடந்த 11-ந்தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொப்புகள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளன.
அவை அனைத்தும் நாகர்கோவில் கோணம், காப்புக்காடு, ஆரல்வாய்மொழி உள்பட 6 இடங்களில் உள்ள அரசு குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்புகள் அனைத்தும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நேற்று முதல் தீவிரமாக நடந்து வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X