என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுக்கரை அருகே மினி வேனில் மது விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்14 Jun 2021 10:30 AM GMT (Updated: 14 Jun 2021 10:30 AM GMT)
மதுக்கரை அருகே மினி வேனில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செட்டிபாளையம்:
கோவை மதுக்கரை பச்சாபாளையம் பாலத்துறை ரோட்டில் மதுக்கரை போலீசார் நேற்று இரவு ரோந்து பணி ஈடுப்பட்டனர். அப்போது பாலத்துறை ரோடு நேசர் பாலம் அருகே நின்றிருந்த மினி வேன் ஒன்று போலீசார் கண்டதும் அங்கிருந்து கிளம்பியது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி மற்றும் போலீசார் மினி வேனை விரட்டி பிடித்தனர். பின்னர் உள்ளே சோதனை செய்த போது அதில் கர்நாடக மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மினி வேனை ஓட்டி வந்த மதுக்கரை பாலத்துறையை சேர்ந்த பிரேம்குமார் (வயது 29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மினி வேனில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். பின்னர் வாகனத்தில் வைத்திருந்த 16 கர்நாடக மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X