என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு கட்டும் திட்டம்-மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டுகோள்
Byமாலை மலர்14 Jun 2021 7:25 AM GMT (Updated: 14 Jun 2021 10:42 AM GMT)
தமிழக அரசு கூரை செலவுக்காக கூடுதலாக ரூ.25 ஆயிரம் வழங்குகிறது.
திருப்பூர்:
மத்திய மாநில அரசுகள் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சொந்த இடம் உள்ளவர்கள் 400 சதுர அடி பரப்பில் கான்கிரீட் வீடு கட்ட தலா ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு கூரை செலவுக்காக கூடுதலாக ரூ.25 ஆயிரம் வழங்குகிறது.தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளியாக இருந்தால் கழிப்பறை கட்டவும் ரூ.18 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. கட்டுமான பொருட்கள் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் வீடு கட்டும் திட்டத்தில் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து திருப்பூர் பயனாளிகள் கூறுகையில், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டங்களுக்கு மானியம் ரூ.2.10 லட்சம் என்பதை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்.கொரோனா ஊரடங்கால் பாதித்த பணிகளுக்கு அரசு மானியத்துடன் வங்கிகளில் ரூ.2லட்சம் வரை கடன் வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X