search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்.

    டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பா.ஜ.க., ஆர்ப்பாட்டம்

    டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
    திருப்பூர்:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊரடங்கில் நாளை முதல் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதனைக்கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஓடக்காட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத்தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
    Next Story
    ×