search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து ஆகஸ்ட் 27-ந்தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரையில் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் பதிவுதாரர்கள் வரும் ஆகஸ்ட் 27-ந்தேதிக்குள் இணையதளம் மூலமாக புதுப்பித்துக்கொள்ளலாம். அதே வேளையில், இணையதளம் வழியாக புதுப்பித்துக் கொள்ள இயலாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து ஆகஸ்ட் 27-ந் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×