search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காரிமங்கலம் அருகே தொழிலாளி மர்ம மரணம்- கொலையா? போலீசார் விசாரணை

    காரிமங்கலம் அருகே தொழிலாளி மர்ம மரணமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளி-முக்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள முனியப்பன் கோவில் பின்புறம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். 

    அதன்பேரில் அவர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த தொழிலாளி தியாகு (வயது 55) என்பதும், அந்த பகுதியில் தங்கி பெயிண்டிங் மற்றும் கூலிவேலை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் தியாகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தியாகு கொலை செய்யப்பட்டாரா? என போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×