என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவ உதவிக்கு போலீசை அழைக்கலாம்
Byமாலை மலர்28 May 2021 6:23 AM GMT (Updated: 28 May 2021 6:23 AM GMT)
மருத்துவ உதவி உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் போலீசாரை அழைக்கலாம் என்று திருப்பூர் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் வயதானவர்கள், வெளியே செல்ல இயலாதவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுவோர், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 94981-81209, 0421-2243324, 2203313 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உதவி தேவைபடுவோருக்கு அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் உதவி செய்வார்கள். அவ்வாறு செல்வோருக்கு வாகன தணிக்கை செய்யும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து அனுமதிக்கப்படுவர்.மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை அழைத்தால் அவரவர் பிரச்சினைகளுக்கு தகுந்தவாறு போலீசாரால் உதவி செய்யப்படும் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X