search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சரின் காலில் விழுந்த வாலிபர்.
    X
    அமைச்சரின் காலில் விழுந்த வாலிபர்.

    அமைச்சரின் காலில் விழுந்த வாலிபரால் பரபரப்பு

    திருப்பூரில் அமைச்சரின் காலில் விழுந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா  சிகிச்சை மையங்களில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.சிக்கண்ணா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இளைஞர் ஒருவர் தனது சகோதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுஆக்சிஜன் படுக்கைவசதி கிடைக்காமல் போராடி வருகிறார்.அவரை அனுமதிக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரி அமைச்சரின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்தார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் உத்தரவின்பேரில் வாலிபரின் சகோதரரை குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். 
    Next Story
    ×