என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
Byமாலை மலர்22 May 2021 12:56 PM GMT (Updated: 22 May 2021 12:56 PM GMT)
ஊரடங்கு காலத்தில் பால், மருந்து பொருட்கள், குடிநீர், பத்திரிக்கை உள்ளிட்டவற்றின் விநியோகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் பால், மருந்து பொருட்கள், குடிநீர், பத்திரிக்கை உள்ளிட்டவற்றின் விநியோகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை மற்றும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இயங்கும் என தமிழக அரச தெரிவித்துள்ள சூழலில், டாஸ்மாக் மதுக்கடைகள் எதுவும் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X