என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வு
நாமக்கல்:
கொரோனா ஊரடங்கு காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
பிற மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது அதிகரித்துள்ளதும், பொது முடக்கத்தால் விற்பனை உயர்ந்துள்ளதாலும், மற்ற மண்டலங்களின் விலை உயர்வு அடிப்படையிலும் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்த்தப்பட்டது.
அதன்படி ஒரு முட்டை விலை ரூ. 4.90 ஆக நிர்ணயிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 12 நாட்களில் முட்டை விலை 695 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற மண்டலங்களில் முட்டை விலை வருமாறு:-
ஆமதாபாத் ரூ.5.50, சென்னை ரூ.5.20, மும்பை ரூ.5.31, சித்தூர் ரூ.5.13, விஜயவாடா ரூ.5.15.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்