என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேரன்மாதேவி அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்13 May 2021 3:17 PM GMT (Updated: 13 May 2021 3:17 PM GMT)
சேரன்மாதேவி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே உள்ள மேலசடையமான்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42) ஆட்டோ டிரைவர். இவருக்கு மயிலம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தங்கராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 9-ந் தேதி தங்கராஜ் மது அருந்திவிட்டு ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்கராஜை மயிலம்மாள் கண்டித்துள்ளார். மேலும் மயிலம்மாள் கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மயிலம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தங்கராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பத்தமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேரன்மாதேவி அருகே உள்ள மேலசடையமான்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42) ஆட்டோ டிரைவர். இவருக்கு மயிலம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தங்கராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 9-ந் தேதி தங்கராஜ் மது அருந்திவிட்டு ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்கராஜை மயிலம்மாள் கண்டித்துள்ளார். மேலும் மயிலம்மாள் கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மயிலம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தங்கராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பத்தமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X