search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பயணிகள் வருகை குறைவு காரணமாக கோவை-நாகர்கோவில் ரெயில் உள்பட 8 ரெயில்கள் ரத்து

    பயணிகள் வருகை குறைவு காரணமாக கோவை-நாகர்கோவில் ரெயில் உள்பட 8 ரெயில்களை தற்காலிகமாக ரத்து செய்து ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    பயணிகளின் வருகை குறைவு காரணமாக ரெயில்களை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி மயிலாடுதுறையிலிருந்து கோவைக்கு செல்லும் ரெயில் (எண்.02083) மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் (02084) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் செல்லும் தினசரி ரெயில் (02685) நாளை முதல் 31-ந் தேதி வரையிலும், மங்களூரில் சென்னை சென்ட்ரல் செல்லும் தினசரி ரெயில் (03686) வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

    நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் தினசரி ரெயில் (06321) மற்றும் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தினசரி ரெயில் (06322) நாளை முதல் 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

    கோவையில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி ரெயில் (06323) மற்றும் மங்களூரில் இருந்து கோவைக்கு செல்லும் தினசரி ரெயில் (06324) நாளை முதல் 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×