search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மனைவியுடன் தகராறு- சேலையில் தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை

    பல்லடம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டெய்லர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    மதுரையை சேர்ந்த ஜெயராமன் மகன் செல்லத்துரை (வயது 41). இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

    செல்லதுரை கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக குடும்பத்துடன் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர் துரைசாமி காம்பவுண்டில் தங்கி திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    சமீபகாலமாக குடிப்பழக்கத்துக்கு ஆளான செல்லத்துரை சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பழனியம்மாள் அருகில் உள்ள பனியன் கம்பெனிக்கு மகள்களுடன் வேலைக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியே இருந்த செல்லத்துரை மது குடித்துவிட்டு திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை வீடு திரும்பிய பழனியம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தார். இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×