search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கபிஸ்தலம் அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது

    கபிஸ்தலம் அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கூனஞ்சேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிப்பவர் ராஜீவ் காந்தி (வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரில் வசிக்கும் சேகர் என்பவருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் சேகரின் உறவினர் அதே பகுதியில் வசிக்கும் முருகானந்தம் (44) என்பவர் சம்பவத்தன்று கூனஞ்சேரி கடைவீதியில் நின்றுகொண்டிருந்த ராஜீவ்காந்தியிடம் தகராறு செய்து வருகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் அவர் காயமடைந்தார். படுகாய மடைந்த ராஜீவ்காந்தியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து ராஜீவ்காந்தி கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தார்.

    Next Story
    ×