என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது
Byமாலை மலர்11 May 2021 9:17 AM GMT (Updated: 11 May 2021 9:17 AM GMT)
கபிஸ்தலம் அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள கூனஞ்சேரி மேட்டுத்தெரு பகுதியில் வசிப்பவர் ராஜீவ் காந்தி (வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரில் வசிக்கும் சேகர் என்பவருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் சேகரின் உறவினர் அதே பகுதியில் வசிக்கும் முருகானந்தம் (44) என்பவர் சம்பவத்தன்று கூனஞ்சேரி கடைவீதியில் நின்றுகொண்டிருந்த ராஜீவ்காந்தியிடம் தகராறு செய்து வருகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் அவர் காயமடைந்தார். படுகாய மடைந்த ராஜீவ்காந்தியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ராஜீவ்காந்தி கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X