என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்10 May 2021 10:19 AM GMT (Updated: 10 May 2021 10:19 AM GMT)
மதுரையில் 2 பெண்களிடம் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த பிரேம்குமார். இவரது மனைவி சுதா (வயது 47).
இவர் சம்பவத்தன்று இரவு மகளுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டு சென்றார். பைபாஸ் ரோடு காளவாசல் பாலம் அருகே சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 கொள்ளையர்கள் சுதா அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக எஸ்.எஸ். காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
மதுரை கீழ பனங்காடி செந்தூர் நகரைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி சாந்தி (24). இவர் நேற்று இரவு குலமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள், சாந்தி அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த பிரேம்குமார். இவரது மனைவி சுதா (வயது 47).
இவர் சம்பவத்தன்று இரவு மகளுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டு சென்றார். பைபாஸ் ரோடு காளவாசல் பாலம் அருகே சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 கொள்ளையர்கள் சுதா அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக எஸ்.எஸ். காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
மதுரை கீழ பனங்காடி செந்தூர் நகரைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி சாந்தி (24). இவர் நேற்று இரவு குலமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள், சாந்தி அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X