search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மதுரையில் 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு

    மதுரையில் 2 பெண்களிடம் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த பிரேம்குமார். இவரது மனைவி சுதா (வயது 47).

    இவர் சம்பவத்தன்று இரவு மகளுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டு சென்றார். பைபாஸ் ரோடு காளவாசல் பாலம் அருகே சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 கொள்ளையர்கள் சுதா அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக எஸ்.எஸ். காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை கீழ பனங்காடி செந்தூர் நகரைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி சாந்தி (24). இவர் நேற்று இரவு குலமங்கலம் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள், சாந்தி அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக கூடல் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×