என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 யூனிட்களில் பழுது
தூத்துக்குடி:
இந்தியாவில் உள்ள பழமையான அனல்மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின்நிலையமும் ஒன்று.
1979-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இங்கு 5 யூனிட்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் தினமும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலக்கரி மூலம் இயங்கும் இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள முதல் 3 யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவை தாண்டி இயங்கி வருவதால் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அனல் மின்நிலையத்தின் 2, 3 மற்றும் 4-வது யூனிட்களில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து மின்உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் 3 யூனிட்களில் பழுது ஏற்பட்டதால் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பழுதடைந்த யூனிட்களில் பழுதை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அனல் மின்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது பழுதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிவடைந்து அங்கிருந்து மின் உற்பத்தி தொடங்கும் என கூறினர்.
தற்போது 1 மற்றும் 5-வது யூனிட்கள் மட்டுமே இயங்குவதால் அங்கிருந்து 220 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்