என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சைக்கான காலி படுக்கைகளின் விவரங்களை அறிந்து கொள்ள புதிய இணையதளம்
Byமாலை மலர்7 May 2021 5:11 PM GMT
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான காலி படுக்கைகளின் விவரங்களை அறிந்து கொள்ள புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. இதனால் நோயாளிகளுக்கு ஆம்புலம்ஸிலேயே சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள தமிழக அரசு இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org என்னும் வலைதளத்தின் மூலம்
1. ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள்
2. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள்
3. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள்
ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X