என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்4 May 2021 3:07 PM GMT (Updated: 4 May 2021 3:07 PM GMT)
விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கேண்டீனில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை ரெயில்வே நிலைய வளாகத்தில் பயணச்சீட்டு எடுக்கும் மையத்தின் முன்பு நிறுத்தியிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றவரின் உருவம் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரித்ததில் மோட்டார் சைக்கிளை திருடியவர் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த கவியரசன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவியரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள கேண்டீனில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை ரெயில்வே நிலைய வளாகத்தில் பயணச்சீட்டு எடுக்கும் மையத்தின் முன்பு நிறுத்தியிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றவரின் உருவம் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரித்ததில் மோட்டார் சைக்கிளை திருடியவர் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த கவியரசன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவியரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X