search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருமங்கலம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி

    திருமங்கலம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் தாலுகா தங்களாசேரி ஆதிதிரா விடர் காலனியை சேர்ந்த வேலு மனைவி பாண்டியம்மாள் (வயது 65). இவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    அதிகாலையில் சாரல் மழை பெய்ததால் பாண்டி யம்மாள் வீட்டிற்குள் சென்று தூங்கினார். அப்போது திடீரென்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தூங்கிக்கொண்டிருந்த பாண்டியம்மாள் மீது மேற்கூரை விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த நாகையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×