என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்- 4 பேர் கைது
Byமாலை மலர்1 May 2021 2:33 PM GMT (Updated: 1 May 2021 2:33 PM GMT)
தியாகதுருகம் அருகே நிலத்தில் மாடு மேய்ந்த தகராறில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் திட்டி, தாக்கி கொண்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிமங்கலம்:
தியாகதுருகம் அருகே சாத்தப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் ரவிச்சந்திரன்(வயது 29). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் சாமிதுரை(34) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சாமிதுரையின் மாடு ரவிச்சந்திரனின் நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, தாக்கி, மிரட்டினர். இதில் ரவிச்சந்திரன், இவரது அண்ணன் துரை(34), மற்றும் நாராயணன்(70), இவரது மகன் சாமிதுரை(34) ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன், சாமிதுரை ஆகியோர் மீதும், சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் துரை, ரவிச்சந்திரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
தியாகதுருகம் அருகே சாத்தப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் ரவிச்சந்திரன்(வயது 29). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் சாமிதுரை(34) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சாமிதுரையின் மாடு ரவிச்சந்திரனின் நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, தாக்கி, மிரட்டினர். இதில் ரவிச்சந்திரன், இவரது அண்ணன் துரை(34), மற்றும் நாராயணன்(70), இவரது மகன் சாமிதுரை(34) ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன், சாமிதுரை ஆகியோர் மீதும், சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் துரை, ரவிச்சந்திரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X