search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    பழைய சூரமங்கலத்தில் ஆட்டோ திருட்டு

    பழைய சூரமங்கலத்தில் ஆட்டோ திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூரமங்கலம்:

    சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 44). ஆட்டோ டிரைவர். சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். பழைய சூரமங்கலம் பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் பகல் முழுவதும் தினமும் வாடகைக்கு ஆட்டோ ஒட்டி விட்டு இரவில் வீட்டிற்கு முன் நிறுத்தி விடுவார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஆட்டோவை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு பூட்டி வைத்துள்ளார். நேற்று காலை பழனிசாமி தூங்கி எழுந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. ஆட்டோ திருட்டு போனது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ஆட்டோவை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×