என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் நாளை இயங்கும்
Byமாலை மலர்30 April 2021 7:56 AM GMT (Updated: 30 April 2021 7:56 AM GMT)
முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணி நேரத்துக்கு ஒரு சேவை வீதம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவில் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
கொரோனா பாதிப்பின் காரணமாக மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணி நேரத்துக்கு ஒரு சேவை வீதம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவில் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
நாளை மே தினத்தையொட்டி தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புறநகர் சிறப்பு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- சூலூர்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி நாளை (சனிக்கிழமை) இயக்கப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X