என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமணமாகாத விரக்தியில் தூக்குபோட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை
கோவை:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் சிபு (வயது 37). கட்டிட தொழிலாளி.
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் பீளமேடு அருகே உள்ள பி.எல்.எஸ். நகரில் தங்கி இருந்து அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சிபுவும் மது குடித்தார். அப்போது அவர் சக தொழிலாளர்களிடம் இத்தனை வருடங்கள் ஆகியும் தனது திருமணம் ஆகவில்லை என கூறி புலம்பி உள்ளார். பின்னர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டனர். மறுநாள் காலையில் பார்த்த போது சிபு கட்டித்தில் உள்ள கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சிபுவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்