என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்ரா பவுர்ணமியையொட்டி பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்ந்தது
Byமாலை மலர்27 April 2021 10:30 AM GMT (Updated: 27 April 2021 10:30 AM GMT)
பரமத்திவேலூர் பூக்கள் ஏல விற்பனை சந்தையில் சித்ரா பவுர்ணமியையொட்டி பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க அதிகளவில் வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.140-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.100-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.150-க்கும், செவ்வந்திப்பூ ரூ.130-க்கும், கனகாம்பரம் ரூ.250-க்கும் ஏலம் போனது.
சித்ரா பவுர்ணமியையொட்டி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப்பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.220-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.
சித்ரா பவுர்ணமியையொட்டி, பூக்கள் விலை உயர்ந்ததால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க அதிகளவில் வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.140-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.100-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.150-க்கும், செவ்வந்திப்பூ ரூ.130-க்கும், கனகாம்பரம் ரூ.250-க்கும் ஏலம் போனது.
சித்ரா பவுர்ணமியையொட்டி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப்பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.220-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.
சித்ரா பவுர்ணமியையொட்டி, பூக்கள் விலை உயர்ந்ததால் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X