search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரெயில் இயங்கும்

    விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    வெறிச்சோடிய சாலை (கோப்புப்படம்)


    இந்நிலையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரெயில் இயங்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் இயங்கும் என்றும் விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×