என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் ஆய்வு
Byமாலை மலர்20 April 2021 10:07 PM GMT (Updated: 20 April 2021 10:07 PM GMT)
திருவள்ளூர் அருகே கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை:
திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் பார்வையிட்டு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீங்கள் தடுப்பூசி போட்டு கொண்டது பாராட்டுக்குரியதாகும். நானும் தடுப்பூசி போட்டு கொண்டேன். எனவே நீங்களும், உங்களது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி போட்டு கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. பத்திரிகையாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருகிற 1-ந்தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இது குறித்த விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் பார்வையிட்டு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீங்கள் தடுப்பூசி போட்டு கொண்டது பாராட்டுக்குரியதாகும். நானும் தடுப்பூசி போட்டு கொண்டேன். எனவே நீங்களும், உங்களது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி போட்டு கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. பத்திரிகையாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருகிற 1-ந்தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இது குறித்த விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X